Wednesday, June 17, 2009

மாயைகள் சில (தொடர்ச்சி) - 2

திராவிடத்திற்கும் தமிழுக்கும் அப்படி உறவு இருக்குமானால், அதை விட அதிக நெருக்கத்தை சைவ, வைணவ மதங்களுக்கும் தமிழுக்கும் இடையே காணலாமே? இந்த இந்து-எதிர்ப்பு திராவிட கொள்கைப் புலிகள் வசவு கட்டுரைகளையும், கவிதைகளையும் தவிர வேறு ‘தொண்டு’ எதையும் தமிழுக்கு ஆற்றவில்லை. தமிழரும் இவர்களால் நன்மையடையவில்லை.

க. பஞ்சாங்கம் என்பவருடைய கட்டுரை நூல் ஒன்றிலே பாரதிக்கும் இந்துத்துவா அமைப்பு மற்றும் ஆர். எஸ். எஸ். க்கும் தொடர்புள்ளதான தொனி திரிக்கப்பட்டது தெளிவாகியது. பாரதியார் போன்ற பொது ஆளுமைகளுக்கூடாகவும் இந்திய மதம் மக்கள் மனதில் பரவி விடுமோ எனும் அச்சம் தெரிந்தது.

இந்தியாவிற்குள் ஊடுருவி இந்திய சித்தாந்தங்களை உடைக்கும் நோக்குள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாக பல வழிகளிலும் முயல்கின்ற்னர். (இதில் சூக்கும உலகினரின் பின்னணியை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பகிரும் எண்ணமும் உள்ளது). இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் எவரும் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை அடைந்தது போல் எதுவும் தெரியாமல் வரவில்லை. இங்கு வந்த வியாபாரிகள் ஒற்றர்களாக அவர்களுக்கு போதுமான தகவல்களை வழங்கிய பின்பே படையெடுத்தனர்.

ஆபிரிக்க, தென்னமரிக்க, ஆஸ்த்த்ரேலிய மக்கள் இவர்களின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்தது போல் இந்தியா சுலபமாக இருக்கவில்லை. இந்து மதம் இவர்களின் பரம வைரியாக மாறிற்று. மேற்கத்தைய மதங்கள், திராவிட இந்து எதிர்ப்புக் கட்சிகள், அவற்றின் நயவஞ்சக நடவடிக்கைகளை தமிழர் புரிந்து கொண்டு இவர்களை விலக்க வேண்டும். இந்திய சித்தாந்தங்கள், பண்பாட்டைப் போற்றும் ஆட்சி அமைய ஒன்றிணையுங்கள்.


No comments:

Post a Comment

 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .