Thursday, March 11, 2010

புதிய நீதி _- சில உளறல்கள்

பல காலம் பனி பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்கு வெம்மை மறந்து போய் விடுவது உண்மை. எல்லா வகை அதி நிலை மாற்றங்களுக்கும் அதில் இயல்பு கண்டவர்களுக்கும் இது பொருந்தும்.

உலகத்தின் மாற்றங்கள் பெரும்பான்மையை ஒத்து இசைந்தே அனுபவிக்க படுகின்றன. இந்த மாற்றங்கள் சேதத்தை ஏற்படுத்தும் எனினும் கூட ஒரு சிலரால் எதிர்க்க முடியாதன. தன்னின சேர்க்கை ஒரு புதிய இயல்பு இல்லை என்ற போதிலும், அது பல உயிரினங்களிலும் பல்லாயிரம் வருடங்களாக அரிதாகவோ மறைவாகவோ காண பட்டது எனும் அளவிலும் இன்றைய உலகில் அவ்வியல்பின் விஹிதம் மிகையானது கண்கூடு. இதனை ஆரோக்கியமான அவசியமான மாற்றமாக கருதுபவர்களை எதிர்க்க முடியாது. ஏன் இப்படியான அசாதாரண நிலை உண்டாகியது எனும் ஆராய்ச்சியை விட ஏன் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது எனும் எதிர் விவாதமே மேலோங்கியுள்ளது.

விஞ்ஞானம் எத்துணை தூரம் அவசியம் என்றும் அதற்கொரு எல்லை வகுப்பதையிட்டும எவரும் அலட்டி கொள்ளவில்லை. சமூகத்துக்கு அது அவசியமா இது அவசியமா என்றெல்லாம் தர்க்கிப்பவர்கள் இதனை முழு சுதந்திரத்துடன் அனுமத்தித்தால் ஏற்பட்ட விழைவுகளில் முன் சொன்னது ஒன்று.

ஒவ்வொரு முறையும் விண்வெளிக்கு ஒரு ஓடம் ஒசோனை பல சதுர கிலோ மீற்றர்கள் அழித்து கொண்டு செல்லும் போது ஒரு ஏழை நாடு மரம் நட வேண்டும் என்பது பெரும்பன்மயினதும் விஞ்ஞாவிசிறிகளினதும் வாதம்.

எண்ணிக்கை தெரியாதளவு விலங்குகள் விஞ்ஞா கூடங்களில் பரிசோதனைக்காக வதை படுவது மனித முன்னேற்றத்துக்காக. அவற்றின் அவலமும் வலிகளும் யாரால் பொறுப்பேற்க பட போகின்றன ?

இயற்கை தேர்வை சிலாகித்த விஞ்ஞா மேதைகள் அதற்கு ஒரு சந்தர்ப்பமும் வழங்க கூடாது எனும் பிடிவாதத்துடன் வலிமையற்ற மனிதர்களை எண்ணிக்கையில் அதிகபடுத்தி விட்டார்கள். இதில் ஏழைகள் சேர்த்தி இல்லை. அவர்களின் வலிமை இயற்கையால் பேணப்படுகிறது. ஆம் நோய்களும் அனர்த்தங்களும் இயற்கை தேர்வு தான்.

உணவுக்கு செலவழிக்கபடும் நேரமும் பணமும் எவருக்கும் இங்கு அநாகரிகமாக தென்படவில்லை. ஒரு கையளவு உணவை ஒரு பன்னாட்டு நிறுவனம் பல மணி நேரம் செலவழித்து உடலுக்கு ஒவ்வாத கூறுகளை கொண்டு தயாரித்து தரும் போது அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு வரும் எவருக்கும் எத்தனையோ மனிதர்கள் காய்ந்த ரொட்டி துண்டு கூட இல்லாது சிரமப் படுவது நினைவுக்கு வருவது இல்லை. இது இயற்கை செய்த சூழ்ச்சி இல்லை. உங்கள் வீட்டில் ஒருவரே அதிகம் உண்டால் மற்றவர்களை அது எவ்வாறு பாதிக்குமோ அதே விளைவு இங்கும் செல்லுபடியாகும். உடை, வாகனம் என்று எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

உடை நாகரீகம் என்ற பெயரில் ஆறாக ஊற்றப்படும் பணத்துக்கும் நேரத்துக்கும் எந்த வகை நியாயம் கற்பிக்கலாம் என்று யோசிக்கிறேன். மூன்றாம் மண்டல நாடுகளில் வாகன புகை, எரிபொருள் சிக்கனம் எல்லாம் பேசும் நபர்கள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ள ஆலை கழிவுகளையோ விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் கார் பந்தயங்களையோ "கவனிக்க" விரும்புவதில்லை.

இப்படி சொன்னதும் சொல்லாததுமான பல மாற்றங்கள் மனிதர்களுக்கு நீதியானதாக தெரியும் நிலை எந்த அடிப்படையில் உருவாகியது? எப்போது மனிதர்கள் இயந்திரங்களுக்கும் அவற்றினால் தேடப்படும் புலன் சுகத்திலிருந்தும்
தம்மை சுதந்தரித்து கொள்ள போகிறார்கள்?

Tuesday, July 28, 2009

Forwarded Links

I got this stuff from a friend.
This may interest you.

EtherPad is the only web-based word processor that allows people to work together in really real-time <http://etherpad.com/ep/about/simultaneously>.When multiple people edit the same document simultaneously, any changes are instantly reflected on everyone's screen. The result is a new and productive way to collaborate on text documents, useful for meeting notes, drafting sessions, education, team programming, and more.

Friday, July 17, 2009

வேற்று மைக் குறிப்புகள்

எனக்கு ஆயாசம் கொள்ள வைக்கும் மனித இயல்பு ஹிப்பக்ரஸி
(Hypocrisy) தான். பெரும்பாலும் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் தமது ஈகோவை ஒரு கொள்கையுடனோ, மொழியுடனோ, ஒரு மனிதனிடமோ இறுக்கமாக பொருத்தி வைத்துள்ளனர். மதரீதியிலான கண்ணோட்டமும் சரி ஒரு பிரபல்யத்துடன் பிணைத்து வைத்திருப்பதும் சரி தெளிவான நடு நிலைப் பார்வையில் அமைவது அரிது.

நேற்று ஒரு நண்பன் கமல்ஹசனைப் பற்றி ஆஹா ஓஹோ என புழுகி தள்ளினான். ஒரு விசிறியாக அவன் அப்படி பேசுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவனின் பார்வை அந்த நடிகரை ஒரு சர்வதேசமட்டத்தில் வைத்து பார்க்கவும் ஈடு இணையற்ற நிலைக்கு கொண்டு செல்லவும் முயன்ற போது எனக்கு பொறுமை காக்க முடியவில்லை. நான் சொன்னேன், கமலை விட நடிப்பில் சிற்ந்தவர்களை நான் வேறு படங்களில் கண்டுவிட்டேன், மேலும் கமல் தன்னை தன் படங்களில் மிகைப்படுத்த தொடங்கிய காலத்திலெயே ஒரு நடிகனாக தன்னை இழந்து விட்டார் என்று. பரமகுடி ”நாலும் தெரிந்த” நாயகனாக காட்டவே பெரும் பிரயத்தனப் படுகிறார் என்றும் விளக்கினேன். உடனே அவன் ஒரு தமிழன் நாலு புதிய விஷயம் செய்யப் போனால் உடனே குறை கண்டு பிடிக்க ஆட் சேர்த்து விடுவீங்களெ என்றான். உள்ளே அதிர்ந்து பின் சுதாரித்து கொண்டு பல திரைப்படங்களையும் உலக சினிமாவையும் மேற்கோள் காட்டினேன். அவன் “எனக்கு அதெல்லாம் தெரியாது, ஆனா கமல் தான் பெஸ்ட், அவரின் நடிப்பில் தவறு இல்லை” என்றான். சினிமா விமர்சனங்களையாவது தொடர்ந்து படிக்கிறியா என கேட்டதுக்கும் இல்லை என்றான். தான் கமல் படம் மட்டும் தான் பார்ப்பேன் என்றவனிடம் எனக்கு முதல் முறையாக ஒன்று உறைத்தது. இங்கு கமல் இல்லை பிரச்சனை. கமலுடன் தன்னை பிணைத்து கொண்டுள்ள நண்பனின் ஈகோ தான் விவாதத்திற்கு உரியது. அவனால் இதை விட்டு வெளியேற முடியாது.

இது போலவே மத நம்பிக்கையாளர்களும் மதம் தாக்கப் படும் போது மனம் தாக்கமடைந்து எதிர் தரப்பில் வன்முறை பிரயோகிக்கின்றனர். சாதி, மொழி, இன பிரச்சனையும் அஃதே.

தெளிவடைவோம் ! சுயத்தை அடைவோம் !!

Sunday, June 21, 2009

நாஸ்திகம்

டவுள் ஏற்பும், கடவுள் மறுப்பும் குறைந்த வயது கொண்டவை அல்ல. எனினும், கடவுளை ஏற்ற கூட்டம் பின்னையதை விட அதிக எண்ணிக்கையில் தான் எப்போதும் உள்ளது. பெரும்பாலும் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. வாழ்வின் அவலமே அந்த இருவருக்கும் ஒரு பொருளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.

நாம் இந்தியாவில் (குறிப்பாக தமிழ் நாட்டில்) காணும் நாஸ்திக குரல்கள் Bertrand Russell உடையதைப் போன்று உறுதியாக தெரியவில்லை. ரஸ்ஸல் ஒரு பெரிய மனோதத்துவ மேதை. அவர் தனது வழ்வில் மனித மனம் தொடர்பில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதின் பின்னர் கடவுள் கொள்கையை சாடினார். ஆனபோதிலும், அவர் முழு நேரமாக கடவுள் தத்துவத்தை தூஷித்து கொண்டிருந்தாரில்லை. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதே அவரின் வாதம்.

புத்தரும் கடவுள் எனும் பொருளைக் கவனிக்க வேண்டியதில்லை என்றே உபதேசித்தார். நவீன விஞ்ஞானத்தின் தந்தை Albert Einstein தனது கடைசி கால ஆராய்ச்சிகளுக்கு ‘ஏதோ ஒரு அப்பாற் பட்ட’ சக்தியை துணைக்கிழுத்துள்ளார். பகவத் கீதையை இள வயதிலேயே படித்திருக்க வேண்டும் எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளது சமயோசிதமாக நாஸ்திகர்களால் மறக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானமோ, மெய்ஞ்ஞானமோ, வேறு எதுவோ, ஒன்றை மறுப்பதால் அறியப்படுவதில்லை. உண்டு எனும் நிலை பயணப்பட வைக்கிறது. இல்லை என்பவன் தனது அறிவின் கதவை அழுத்தி மூடி விடுகிறான். கோபுரத்தைத் திருடுபவர்கள் அதை ஒளித்து வைக்கவும் தெரிந்திருக்க வேணும் என ஒரு முதுமொழி உண்டு. திருடிய கோபுரத்தை எங்கே ஒழித்து வைக்க போகிறார்கள்? கோபுரம் இருந்த இடத்தில் எதை வைக்க போகிறார்கள்? நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வழக்கத்தை இதற்கு முன் வந்த அதி உன்னத தத்துவ மேதைகளே அகற்ற முடியவில்லை, அஞ்சாம் வகுப்பு அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களுமா அழிக்கப் போகிறார்கள்?
மேடை போட்டு ‘இல்லாத’ கடவுளைத் திட்டும் நாஸ்த்திக வாதம் மனப் பிறழ்ச்சியே தவிர வேறில்லை. இவர்கள் ஏதாவது ஒரு துறையில் தீவிர ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளா? அரிஸ்டோட்ல், பிளேட்டோ, கன்பூஷியஸ் போன்ற மேதைகளா? ஹெகல், ரஸ்ஸல் போன்ற தத்துவ விற்பன்னர்களா? பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெரும் வர்த்தகர்களா?
இது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்று சொல்ல முடியாவிட்டால் இவர்கள் குறை கூறும் வேலை வெட்டி இல்லாத ‘சாமி’ யார்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? இவர்களும் வெத்து வேட்டு வீராச்சாமிகள் தாம்.
எதோ சொல்லிபுட்டேங்க, கேள்வி அல்லது திருத்தம் இருந்தா பதில் சொல்லுவேனுங்க.
நன்றிங்க.
 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .