Tuesday, July 28, 2009

Forwarded Links

I got this stuff from a friend.
This may interest you.

EtherPad is the only web-based word processor that allows people to work together in really real-time <http://etherpad.com/ep/about/simultaneously>.When multiple people edit the same document simultaneously, any changes are instantly reflected on everyone's screen. The result is a new and productive way to collaborate on text documents, useful for meeting notes, drafting sessions, education, team programming, and more.

Friday, July 17, 2009

வேற்று மைக் குறிப்புகள்

எனக்கு ஆயாசம் கொள்ள வைக்கும் மனித இயல்பு ஹிப்பக்ரஸி
(Hypocrisy) தான். பெரும்பாலும் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் தமது ஈகோவை ஒரு கொள்கையுடனோ, மொழியுடனோ, ஒரு மனிதனிடமோ இறுக்கமாக பொருத்தி வைத்துள்ளனர். மதரீதியிலான கண்ணோட்டமும் சரி ஒரு பிரபல்யத்துடன் பிணைத்து வைத்திருப்பதும் சரி தெளிவான நடு நிலைப் பார்வையில் அமைவது அரிது.

நேற்று ஒரு நண்பன் கமல்ஹசனைப் பற்றி ஆஹா ஓஹோ என புழுகி தள்ளினான். ஒரு விசிறியாக அவன் அப்படி பேசுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவனின் பார்வை அந்த நடிகரை ஒரு சர்வதேசமட்டத்தில் வைத்து பார்க்கவும் ஈடு இணையற்ற நிலைக்கு கொண்டு செல்லவும் முயன்ற போது எனக்கு பொறுமை காக்க முடியவில்லை. நான் சொன்னேன், கமலை விட நடிப்பில் சிற்ந்தவர்களை நான் வேறு படங்களில் கண்டுவிட்டேன், மேலும் கமல் தன்னை தன் படங்களில் மிகைப்படுத்த தொடங்கிய காலத்திலெயே ஒரு நடிகனாக தன்னை இழந்து விட்டார் என்று. பரமகுடி ”நாலும் தெரிந்த” நாயகனாக காட்டவே பெரும் பிரயத்தனப் படுகிறார் என்றும் விளக்கினேன். உடனே அவன் ஒரு தமிழன் நாலு புதிய விஷயம் செய்யப் போனால் உடனே குறை கண்டு பிடிக்க ஆட் சேர்த்து விடுவீங்களெ என்றான். உள்ளே அதிர்ந்து பின் சுதாரித்து கொண்டு பல திரைப்படங்களையும் உலக சினிமாவையும் மேற்கோள் காட்டினேன். அவன் “எனக்கு அதெல்லாம் தெரியாது, ஆனா கமல் தான் பெஸ்ட், அவரின் நடிப்பில் தவறு இல்லை” என்றான். சினிமா விமர்சனங்களையாவது தொடர்ந்து படிக்கிறியா என கேட்டதுக்கும் இல்லை என்றான். தான் கமல் படம் மட்டும் தான் பார்ப்பேன் என்றவனிடம் எனக்கு முதல் முறையாக ஒன்று உறைத்தது. இங்கு கமல் இல்லை பிரச்சனை. கமலுடன் தன்னை பிணைத்து கொண்டுள்ள நண்பனின் ஈகோ தான் விவாதத்திற்கு உரியது. அவனால் இதை விட்டு வெளியேற முடியாது.

இது போலவே மத நம்பிக்கையாளர்களும் மதம் தாக்கப் படும் போது மனம் தாக்கமடைந்து எதிர் தரப்பில் வன்முறை பிரயோகிக்கின்றனர். சாதி, மொழி, இன பிரச்சனையும் அஃதே.

தெளிவடைவோம் ! சுயத்தை அடைவோம் !!

Sunday, June 21, 2009

நாஸ்திகம்

டவுள் ஏற்பும், கடவுள் மறுப்பும் குறைந்த வயது கொண்டவை அல்ல. எனினும், கடவுளை ஏற்ற கூட்டம் பின்னையதை விட அதிக எண்ணிக்கையில் தான் எப்போதும் உள்ளது. பெரும்பாலும் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. வாழ்வின் அவலமே அந்த இருவருக்கும் ஒரு பொருளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.

நாம் இந்தியாவில் (குறிப்பாக தமிழ் நாட்டில்) காணும் நாஸ்திக குரல்கள் Bertrand Russell உடையதைப் போன்று உறுதியாக தெரியவில்லை. ரஸ்ஸல் ஒரு பெரிய மனோதத்துவ மேதை. அவர் தனது வழ்வில் மனித மனம் தொடர்பில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதின் பின்னர் கடவுள் கொள்கையை சாடினார். ஆனபோதிலும், அவர் முழு நேரமாக கடவுள் தத்துவத்தை தூஷித்து கொண்டிருந்தாரில்லை. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதே அவரின் வாதம்.

புத்தரும் கடவுள் எனும் பொருளைக் கவனிக்க வேண்டியதில்லை என்றே உபதேசித்தார். நவீன விஞ்ஞானத்தின் தந்தை Albert Einstein தனது கடைசி கால ஆராய்ச்சிகளுக்கு ‘ஏதோ ஒரு அப்பாற் பட்ட’ சக்தியை துணைக்கிழுத்துள்ளார். பகவத் கீதையை இள வயதிலேயே படித்திருக்க வேண்டும் எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளது சமயோசிதமாக நாஸ்திகர்களால் மறக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானமோ, மெய்ஞ்ஞானமோ, வேறு எதுவோ, ஒன்றை மறுப்பதால் அறியப்படுவதில்லை. உண்டு எனும் நிலை பயணப்பட வைக்கிறது. இல்லை என்பவன் தனது அறிவின் கதவை அழுத்தி மூடி விடுகிறான். கோபுரத்தைத் திருடுபவர்கள் அதை ஒளித்து வைக்கவும் தெரிந்திருக்க வேணும் என ஒரு முதுமொழி உண்டு. திருடிய கோபுரத்தை எங்கே ஒழித்து வைக்க போகிறார்கள்? கோபுரம் இருந்த இடத்தில் எதை வைக்க போகிறார்கள்? நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வழக்கத்தை இதற்கு முன் வந்த அதி உன்னத தத்துவ மேதைகளே அகற்ற முடியவில்லை, அஞ்சாம் வகுப்பு அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களுமா அழிக்கப் போகிறார்கள்?
மேடை போட்டு ‘இல்லாத’ கடவுளைத் திட்டும் நாஸ்த்திக வாதம் மனப் பிறழ்ச்சியே தவிர வேறில்லை. இவர்கள் ஏதாவது ஒரு துறையில் தீவிர ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளா? அரிஸ்டோட்ல், பிளேட்டோ, கன்பூஷியஸ் போன்ற மேதைகளா? ஹெகல், ரஸ்ஸல் போன்ற தத்துவ விற்பன்னர்களா? பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெரும் வர்த்தகர்களா?
இது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்று சொல்ல முடியாவிட்டால் இவர்கள் குறை கூறும் வேலை வெட்டி இல்லாத ‘சாமி’ யார்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? இவர்களும் வெத்து வேட்டு வீராச்சாமிகள் தாம்.
எதோ சொல்லிபுட்டேங்க, கேள்வி அல்லது திருத்தம் இருந்தா பதில் சொல்லுவேனுங்க.
நன்றிங்க.

Friday, June 19, 2009

ஆஸ்திகம் எது?

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் எப்போதும் எதையாவது சார்ந்தே உள்ளான். மனித மனத்துக்கு தனிமை பயங்கரமாகவே உள்ளது. கண்ணுக்கு தெரியும் அச்சுறுத்தல்கள் மட்டும் அல்ல, பார்வை வீச்சுக்கு அப்பாற்பட்ட அமானுட ஆபத்துகளையும் விலக்க ஒரு பாதுகாப்பை நாடும் இயல்பு பெரும்பாலான மனிதர்களிடம் உள்ளது. இதற்கு நலிவுறாத ஒரு வலிமை வேண்டும்.

உண்மையில் ஆன்ம விசாரம் இவற்றுக்கும் அப்பாற்பட்டது. ஒரு விளையாட்டரங்கின் அருகே வசிப்பதாலோ, விளையாட்டுச் செய்திகளை படிப்பதாலோ, ஒரு விளையாட்டு வீரருடன் சினேகிதித்துக் கொள்வதாலோ நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் ஆக மாட்டீர்கள் என்பது எத்தனை யதார்த்தமோ அதை விட அதிக சிரமமானது ஆன்ம நிலையை உணர்வது. கோயில்களிலோ, ஆஸ்ரமங்களிலோ வெறுமனே வாய் வலிக்க பஜனை பாடுவதால் உங்கள் கர்வம் தவறான முறையில் ஊட்டங்கண்டு விடும். அப்படிப் பட்டவர்களை நாம் சந்தித்துள்ளோம். பரிதாபமாக, அவர்கள் தேங்கிவிட்ட நீராகிப் போவர். இதிலிருந்து மீள ஒரு தூண்டல் வேண்டும்.
நாம் இன்பத்தையடைய செய்யும் முயற்சிகளில் காற்பங்கு கூட துன்பத்திலிருந்து வெளியேறுவதற்கு செலவளிப்பதில்லை. படிப்பு, வேலை, திருமணம் என எதை எடுத்தாலும் கடவுளை வேண்டும் அதே சமயம் அக்காரியங்களில் இயன்ற முயற்சி எடுக்கும் நாம், துன்பப்படும் போது முற்று முழுதாக கடவுள் பார்ப்பான் என்று முயலாது இருப்பது அறிவுடைமை அல்ல. நன்றாக படிக்கும் ஒருவர் இறைவனை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் நல்ல பெறுபேறு அடைவது உறுதி. இதற்கு மறுதலை எதிர் விளைவையே தரும். சரி, அப்படியானால் ஏன் கடவுள்?
துக்கம் கூட வெட்கம் அறியாது. துன்பத்தில் நீங்கள் நீங்களாக இருப்பது கடினம். உடற்தொழிலியல், மனம் என சர்வமும் ‘அடி’பட்டு விடும் நிலையில் நம்மை நாம் காண ஒரு மூன்றாம் இடம் நமக்கு தேவை. அதை இறை வழிபாடுகள் நிகழ்த்துகின்றன. மனம் பேதலித்த துயரத்திலும் ஒருவரால் மனம் ஒருமிக்க முடியுமானால் அது மனதின் வளர்ச்சிக்கு, உயர்வுக்கு வழிகோலும். முடிவில், துன்பத்தில் இருந்து மீள்பவர்கள் முன்னிருந்ததை விட அதிக உறுதியுடன் எழுவது திண்ணம். அவர்களால் அதிக வலிமை கொண்டு போரிட முடியும். வென்றவன்? அவனுக்கும் வெற்றியினால் நிதானம் இழக்காத நிலை இறைவழியால் அணுகப்படுகிறது. இதற்கும் ஒரு ஆற்றல் வேண்டும்.
கோயிற் திருவிழாக்களில், பாமரத்தனமான வேண்டுதலில் தான் ஆஸ்திகரும், நாஸ்திகரும் கடவுளைக் காண்கிறார்கள். அதனால் தமது கொள்கையில் தோற்கிறார்கள். இன்று, CEOக்கள், மேலாண்மையாளர்கள், தொழினுட்பவியலாளர்கள் போன்ற(மூளை) வேலைப்பளு கூடியவர்களுக்கு அவர்களின் stress relief ஆக கம்பியூட்டர் கேம்ஸ், செக்ஸ் உறவுகள், வெளிக்கள விளையாட்டுகள் என பரிந்துரைக்கப் படுகிறது. கூலி வேலை செய்வோர் சாராயக் கடையை அல்லது சினிமா தியேட்டரை நாடுகின்றனர். அது போல, அன்றைய காலங்களில் கோயில் திருவிழாக்கள் ஏற்படுத்தப் பட்டவை என கூறுகிறார்கள். இதில் உள்ள முறைகேடுகள் சமயம் சார்ந்தவை அல்ல, மாறாக அது சமூக மனம், சூழல் தொடர்பு பட்டது. அதை பின்னர் பார்போம்.

என்வே, ஆன்ம வழி செல்வோர் இந்தப் புறக்களியாட்டங்களில் தொடர்ந்து நிலை பெறாமல் அகப் பயணத்திற்கான முறைகளைப் பயில வேண்டும். ஒருவரின் வழி இன்னொருவருக்குப் பொருந்தா. எனவே பொருத்தமானதை வழிகாட்டிகளை அடைந்தோ, ஒவ்வொரு வழியாக முயன்றோ கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு குரு வேண்டும்.
கோயில்களிலும், மடாலயங்களிலும், ஆஸ்ரமங்களிலும் அவ்வழிகளை அடைய முடியாதவ்ர்களும், ஆன்மீகத்துக்கு தயார் இல்லாதவர்களும் பல சமயங்களில் துஷ்ட செய்கைகளில் ஈடுபடுவதையும், தவறான முன்னுதாரணமாக விளங்குவதையும் காணலாம். இவர்களை இறைக் கொள்கையுடன் பொருத்த தேவை இல்லை. உங்கள் வாகனச் சக்கரத்தில் அழுக்குப் பட்டால் வாகனத்தை எரிப்பீர்களா? அது போல், இந்த கயவர்களை விலக்கி விடுங்கள் அல்லது விலகி விடுங்கள்.
ஏன் ஆன்மீக முறைகள் தேவை? அதை அடையாதிருப்பதால் என்ன கேடு?
இயற்கையில் ஒவ்வொரு கூறும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. அது ஒரு நிலைபேறடையும் வரையில் இது தொடர்கிறது, அடைந்த பின் மீண்டும் (வேறு நிலைக்குத்) தொடர்கிறது. சிறு மாற்றங்கள் பெரு விளைவுகளாக தோற்றம் பெறுகின்றன. ஒரு சிறு கல் கல்லாகவே இருப்பதில்லை, அது மண்ணாகவோ அதை விட நுண் துகளாகவோ மாறிக்கொண்டிருக்கிறது. துகள்கள் மலையாகவும் மாறும். ஒரு buffer condition யை அடையும் வரையில் அத்தனை பொருட்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. இது மனிதருக்கும் பொருந்தும்.
இம்மாற்றங்கள் புறத்தொடர்பிலான உறவு மாற்றமல்ல. ஏழை பணக்காரனாதலும், பணக்காரன் ஏழையாதலும், அழகன், குரூபி, படிப்பு போன்றவற்றுக்கு ஞானிகளும், முன் பயணித்தவர்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நீங்களும் அணுத்துகள்களால் ஆனவர்கள். அணுதவிர்ந்த அதி நுண்துகள்களும் அறியப்பட்டுள்ளன. அறியப்படாத பொருட்களும் இருப்பதற்கு இன்னும் சாத்தியம் உண்டு. அணுக்களால் ஆக்கப்பட்ட உடலே ’நாம்’ என்பவர்கள் இத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.
மூலகங்களாலும் அவற்றின் அணுக்ககளாலும் நமது உடல் கருப்பையில் ஆக்கப் பட்டபின் வெளியேறி காலங்கள் கடந்து முதுமை அடைந்து மரணிக்கிறது. இரும்புக்கு பாதுகாப்பு கவசங்கள் இடாத பட்சத்தில் அது துருவடைந்து வெறு சேர்வைகளாகி விடுவது உண்மை. உடலையும் எந்த பராமரிப்பும் இல்லாது விடும் போது அதன் இயல்பில் மரணத்தை நெருங்கி விடும். அதற்காக கண்டறியப்பட்ட முறைகளே இந்திய இறை வழிபாடுகள்.
மரணத்தை வெல்லல் அல்லது தள்ளிப்போடுதல் என்பதன் பொருள் மரணத்தில் அச்சம் அல்ல. ஒரு பொறியியலாளர் 55 வயதை நெருங்கி விட்டர் ஆனாலும் அவரின் குழந்தைகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை. அவர் இன்னும் 10 வருடம் வேலை செய்து சம்பாதிக்க விரும்புவார் தானே? அது போல், பல வித்தைகளுக்கும் அவை அறியப்பட்ட அதிக ஆயுள் அவசியம். அதற்காகவே இந்திய யோகிகள் உடல் பேணும் முறைகளை போதித்தார்கள். ஆன்ம நாட்டம் உடையவர்கள் உடல் பேணுதல் நன்று.
சடப்பொருட்களில் அணுக்களுடன் மின்காந்தப் புலம் போன்றவையும் ஒளிக்கதிர்களும் தங்கியுள்ளன. இவ்வலைகள் இச்சடபொருட்களில் புதிதாக சேர்ந்தோ அல்லது விட்டு விலகியோ செல்லக்கூடியன. இது சடப்பொருட்களின் மின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப நிகழும். மின் காந்த அலை மாறுதலுக்கு இரசாயன, பெளதீக மாற்றங்கள் காரணமாகும்.
இது போல, யோகிகள் மனிதர்களின் சக்தி விளையாட்டினை மெருகூட்டிச் சென்றார்கள். பாரத கண்டத்தில் பல இடங்களிலும், பலராலும், பல விதமான முறைகள் பின் பற்றப்பட்டு, பின்னர் அவற்றிக்கிடையான ஒற்றுமைகள் அறியபடுமிடத்து அவை ஒரு சேர ஹிந்து மதமாக அறியப்பட்டது. இதற்கும் ஆதி வரலாற்றுக்கும், இந்திய நாகரிகத்துக்கும் தொடர்பு காணல் நேர விரயம்.

எந்த முறையில் உடலில் இரசாயன (chemical), பெளதீக (physical), பொறி (mechanical) மாற்றங்களை மேற்கொண்டால் பிரபஞ்ச சக்திகளை அதிகம் தாங்கிக் கொள்ளலாம் என்பதின் இரகசியமே உண்மை ஆன்மீகத்தின் தேடு பொருள்.
சரி இந்த சக்தியை கொண்டு என்ன செய்வது? சேர்த்து பாருங்கள், தெரியும். நீங்கள் ‘அந்த’ உலகத்தில் பிசி ஆகி விடுவீர்கள்.
அறிந்து தேடுவோம்...

Thursday, June 18, 2009

தெளிவடைவோம், தயவுசெய்து

வடக்கிலுள்ள சில இந்து அமைப்புகள் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான இந்து சமயியிகளுக்கு தமது சமயம், பண்பாடு பற்றிய எதுவிதமான அறிவும் இல்லையோ எனும் சந்தேகத்தின் அனுமானத்தில் சில விடயங்களை முன் வைக்கிறேன். தெரிந்தவர்கள் எனது முயற்சியை செதுக்கித் தாருங்கள்.

புத்தரோ அவரின் போதனைகளோ இந்துக்களுக்கு புதிதல்ல. புத்தரும் இந்து வேதங்களை அடிக்கடி உசாத்துணைப் படுத்தியுள்ளார். அவரின் கொள்கைகள் மறு பிறப்பை நம்புகின்றது. இது இந்துக்களுக்கு ஒரு புதிய விடயமா? அவர் ‘இந்திரனின்’ பிரசன்னத்தை தனது உபதேசங்களில் பயன்படுத்தினார். அவரின் ஞானம் அடையப்பட்டவிதம் அட்டாங்க, பதஞ்சலி யோக முறைகளுக்கூடாகவே உள்ளது. தியானமும் அகவிசாரமும் ஏற்கனவே இந்த தேசத்தில் உள்ளது தான். அதை புத்தர் கொண்டு வரவில்லை. சில இந்து எதிர்ப்பாளர் கூறுவது போல் புத்தரின் வழிமுறை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கபடவில்லை. இங்கே விற்க்கபட முடியாத பொருள் வேறிடம் கொண்டு செல்லப்பட்டது. அவ்வளவே. புத்தர் ஒரு சிறந்த ஞானி என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. அவரின் கருத்துகள் பலரை சென்றடைய காரணம், இந்து மதம் அப்போது குறைந்தளவு பேச்சு வழக்கில் இருந்த சமஸ்க்ருதத்திலும், அதைக் கற்ற பண்டிதர்கள், பணம் படைத்தவர்களின் கைகளிலேயே பயணப்பட்டது தான். சனாதன தர்மத்தின் முக்கிய கருத்துகளான கர்மவினையும் மறுபிறப்பும், தியானமும் அகப்பயணமும், சன்னியாஸ வாழ்வும், ஜபம் போன்றனவும் புத்தரினால் பாமரர்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அப்போது பேச்சுவழக்கிலிருந்த பாலி மொழி அதற்கு உதவியது. இது சமஸ்க்ருதத்தின் கொச்சை வடிவம் (slang) என்பது எனது ஆய்வு. இந்நிலையில், இந்து தர்மம் பழைய வழிகளில் மாற்றம் ஏற்படுத்தி தன்னை சூழலுக்கு இயைபாக்கிக் கொண்டது. அதாவது, புத்தரால் ஏற்பட்ட மாற்றம் இந்து ஞானிகளை சுதாரித்துக் கொள்ள வைத்தது. பரஸ்பர விவாதங்கள் அறிஞ்ஞர்களிலும் கேட்போரிலும் சனாதனதர்மத்தில் ஆழச்செல்லும் தேவைக்கு உதவியது.

ஆக, இந்து மதம் யார் தோளில் ஏறியாவது தனது சாஸ்வதத்தை (eternality) நிறுவிக்கொள்ளும் வலிமையுடையது. மனிதர் மாறிவிடுவர், மாறிய மனிதரில் தன்னை மாற்றிக் கொள்ளும் (transit) இந்து மதம் என்றும் சாகா. நீங்கள் உண்ணும் உணவின் வகையை மாற்றலாம், ஆனால் உண்பதை நிறுத்த முடியாது. அது போல சனாதன தர்மத்தின் சாரம் உடலுக்கப்பால் செல்ல முயல்பவர்களுக்கு தவிர்க்கமுடியாத ஓடம் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடலையும் அதன் வாழ்வையும் இறுதிக் குறிக்கோளாக கொள்ளாத ஒரு மார்க்கம் பொறுப்புடையதல்ல. பல நூறாண்டுகளாக நடைமுறையில் இல்லாத வர்ணாசிரம நடைமுறை சனாதன தர்மத்தின் போதனை அல்ல, மாறாக அது கண்டறிந்த சமூக-மனவியல் நடைமுறை. அந்நடைமுறை இப்போதும் உள்ளது. வர்ணாசிரமத்தை பலர் துஷ்ப்ரயோகம் செய்துள்ள அதே வேளை தவறாகவும் புரிந்து வைத்துள்ளனர்.

பாரிய கட்டடம் ஒன்றினை நிர்மாணிக்கையில் அங்கே பொறியியல் வல்லுனர்கள், மேற்பார்வையாளர், வள வழங்குனர், கூலி வேலையாட்கள் என வகை பிரிந்து கிடப்பதை யார் மறுக்க வல்லோர்? ஏன் இந்த வர்ணாசிரமத்தை இப்படி மாற்றினால் என்ன. கூலியாட்கள் engineer களாலும், மேஸ்த்திரியாலும் அடக்கி ஒடுக்கபட்டு தானே வேலை வாங்கப்படுகிறார்கள். இந்த கூலியாட்களை engineer களாக தரமுயர்த்தி இந்த அநியாயத்தை நிறுத்தினால் என்ன? இப்படிதான்யா அன்றிலிருந்து இன்று வரை தகுதி அடிப்படையில் வேலைகளும் வாழ்க்கைத்தரமும் இருக்கு. ஒரு தொழிலாளி தனது நிலையை அம்பானியாக (the famous Reliance moto, Ambani) அறிவிப்பதன் மூலமே இதனை மாற்றமுடியும். சாகும் வரையில் தொழிலாளியாக இருந்தோ, வேற்றுச் சமயத்துக்கு மாறிக் கொண்டோ, இந்து மதத்தை தூஷித்தோ அல்ல.

அம்பேத்கார் சாதியத்தால் பாதிக்கப்பட்டதற்கு தனிமனித, சமூக மனவியல் அவரால் கவனிக்கபடவில்லை. எனினும், தந்தையுடன் பிணங்கிய மகன் தன் சிற்றப்பனிடம் புகலடைந்தான், தந்தையின் எதிரியிடம் அல்ல. அம்பேத்கார் தன்னை இந்திய மண்ணின் எதிரியாக காட்டிக் கொள்ளவில்லை. தம்பியுடன் உள்ளதால் தந்தைக்கும் வருத்தமில்லை, சிற்றப்பனும் அப்பனைத் தாக்கப் போவதில்லை.

ஆகவே, புத்த மதத்தை பயன்படுத்தி இந்து மார்க்கம் தாக்கப்படுவதில் ஓட்டைகள் நிறைய உண்டு. எதிரிகள் கவனித்து திருத்திக் கொள்ளவும்.

தெளிவடைந்து மேலும் தொடரும்...

Wednesday, June 17, 2009

மாயைகள் சில (தொடர்ச்சி) - 2

திராவிடத்திற்கும் தமிழுக்கும் அப்படி உறவு இருக்குமானால், அதை விட அதிக நெருக்கத்தை சைவ, வைணவ மதங்களுக்கும் தமிழுக்கும் இடையே காணலாமே? இந்த இந்து-எதிர்ப்பு திராவிட கொள்கைப் புலிகள் வசவு கட்டுரைகளையும், கவிதைகளையும் தவிர வேறு ‘தொண்டு’ எதையும் தமிழுக்கு ஆற்றவில்லை. தமிழரும் இவர்களால் நன்மையடையவில்லை.

க. பஞ்சாங்கம் என்பவருடைய கட்டுரை நூல் ஒன்றிலே பாரதிக்கும் இந்துத்துவா அமைப்பு மற்றும் ஆர். எஸ். எஸ். க்கும் தொடர்புள்ளதான தொனி திரிக்கப்பட்டது தெளிவாகியது. பாரதியார் போன்ற பொது ஆளுமைகளுக்கூடாகவும் இந்திய மதம் மக்கள் மனதில் பரவி விடுமோ எனும் அச்சம் தெரிந்தது.

இந்தியாவிற்குள் ஊடுருவி இந்திய சித்தாந்தங்களை உடைக்கும் நோக்குள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாக பல வழிகளிலும் முயல்கின்ற்னர். (இதில் சூக்கும உலகினரின் பின்னணியை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பகிரும் எண்ணமும் உள்ளது). இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் எவரும் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை அடைந்தது போல் எதுவும் தெரியாமல் வரவில்லை. இங்கு வந்த வியாபாரிகள் ஒற்றர்களாக அவர்களுக்கு போதுமான தகவல்களை வழங்கிய பின்பே படையெடுத்தனர்.

ஆபிரிக்க, தென்னமரிக்க, ஆஸ்த்த்ரேலிய மக்கள் இவர்களின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்தது போல் இந்தியா சுலபமாக இருக்கவில்லை. இந்து மதம் இவர்களின் பரம வைரியாக மாறிற்று. மேற்கத்தைய மதங்கள், திராவிட இந்து எதிர்ப்புக் கட்சிகள், அவற்றின் நயவஞ்சக நடவடிக்கைகளை தமிழர் புரிந்து கொண்டு இவர்களை விலக்க வேண்டும். இந்திய சித்தாந்தங்கள், பண்பாட்டைப் போற்றும் ஆட்சி அமைய ஒன்றிணையுங்கள்.


Monday, June 15, 2009

மாயைகள் சில

மக்கள் மனதில் உள்ள சில மாயைகள் பற்றி நினைக்கையில் பல இடங்களிலும் ஏற்கனவே ஓரளவு பேசப்பட்ட சில விடயங்களை பகிரலாம் என நினைக்கின்றேன்.

௧. இந்தியாவின் திராவிடர் கொள்கைகளும் இந்து மத (பிராமண) எதிர்ப்பும்

இந்தியாவில் மட்டுமல்லாது சகல இடங்களிலும் சாதி, மத, மொழி, நிற, இனம் போன்ற இன்ன பல விதங்களிலும் வலிமை பெற்ற ஒரு சாரார் மற்றவரை ஆதிக்கத்திற்கு உட்படுத்தியே வந்துள்ளனர். இந்தியாவில் இருந்த மன்னர் ஆட்சியில் சாஸ்திரங்கற்ற பிரிவினராக பெரும்பாலும் அந்தணர்களே இருந்தனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் அவர் வழி வந்தவரை சமூகத்தில் உயர்த்தி வைத்தது. மனித மனத்தின் தன்முனைப்பு எப்பொதும் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தி காட்டவே எத்தனிகிறது. இவர்களும் விதிவிலகின்றி தம்மை ஏனைய சமூகங்களிலிற்ருந்து பல விதங்களிலும் வேற்றுமை படுத்தி கொண்டனர். ஆனால் இந்த நிலை பின்னர் வந்த அரசியல் நிகழ்வுகளால் அதிக காலம் நீடிக்கவில்லை. பெரும்பாலான பிராமணர்கள் தம்மை சமூகத்திற்குள் இடை சொருகி கொண்டோ அல்லது முற்றாக ஒதுங்கியோ வாழத்தொடங்கிவிட்டனர்.

மொஹலாயர் ஆட்சியின் போது அவர்கள் மதம், மொழி, கலாச்சாரங்கள் ஆழப்பட்டவர் மேல் திணிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆங்கிலேயர் நம்மை அடக்கியாண்டார்கள். அவர்களின் மதம், கலாச்சாரம் போன்றவையும் உயர்வு தாழ்வை அடியொற்றியே அமைந்தது. உதாரணமாக, இரு மேற்கத்தைய மத, கலாச்சாரங்களும் இந்திய மதங்கள், கலாச்சாரத்தை இழிவு படுத்தியே கத்தி முனையிலோ, காசு/ பதவி வழியிலோ பரப்பப் பட்டது. இதற்கு அவர்களுக்கு காலாவதியான “பிராமண மேலாதிக்கம்” கை கொடுத்தது. இன்னும் கை கொடுக்கிறது. இவ்விரு மதங்களும் தம்மைத் தவிர வேறு மதங்களை அனுமதிக்காத போக்கையே ஆதார அடிப்படையாக கொண்டவை. நிற்க.

தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்கள் தமது கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்டித்தின்ற, தின்றுகொண்டிருக்கும் மேற்கத்தைய ஆட்சியை விட ஏழை, அழுக்கு வேட்டி பிராமணர் கூட்டத்தைப் பரம வைரிகளாக்கியது விந்தை! சாதி அடிப்படையில் எங்காவது அரிவாளைத் தூக்கி கீழ்சாதி என வர்ணிக்கப்படுவோரை வெட்டிய பிராமணர் எண்ணிக்கை, சோம நாதர் கோயிலை கொள்ளையடிக்க வந்த முஹமது கோரி வெட்டிக் கொன்ற பிராமணர் எண்ணிக்கையை விட அதிகமோ? சாதி வெறியை எதிர்ப்பது தான் இந்த (இல்லாத) திராவிட கட்சிகளுக்கு ஒரே வெறி என்றால், இங்கு ஒரு கட்சி தான் இருக்க வேண்டும். ஆனால், சாதிக்கொரு கட்சி, ஆளுக்கொரு கட்சி தொடங்கி தமக்குள் மோதிக்கொள்வதில் பிச்சைக்கார பிராமணர் எங்கே வந்தார்கள்? தமிழ் நாடு எத்தனை முறை, எத்தனை காலத்துக்கு பிராமணக் கட்சியின் ஆட்சியில் இருந்தது? 700 வருட முஸ்லிம் ஆட்சியும், அதன் பின்னரான க்றிஸ்த்தவ ஆட்சியும் இந்துப் பிராமணர்களை உயர் சாதியினராக கெளரவித்ததா? இத்தனை காலம் ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள் சாதி முறையை ஒழித்துவிட்டனவா? ஒவ்வொரு சாதி அமைப்பும் கொம்பு சீவி விடப்பட்டு, அதன் மூலம் அரசியல் நடத்தப் பயன்படுகின்றனவே தவிர வேறு நன்மைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

இப்போதுள்ள திராவிடக் கட்சி எந்த விதமான அராஜக அடக்கு முறைகளையும் தம்மை சாராதவரில் பிரயோகிக்கவில்லையா? ஊழல் எதுவும் இவர்கள் செய்யவில்லையா? "ஆதாரம் இருக்காடா?” என்ற கர கர பேச்சுகளால் பாமரர்கள் உணர்ச்சியூட்டப்படலாம். இந்திய தமிழ் சினிமாவிலும், டீ. வி நாடகங்களிலும் புத்தியை தொலைத்து விட்ட சாதாரணர்களை எப்போதும் இயற்கை தேர்வு செய்வதில்லை. அவ்ர்கள் மெதுவாக உலர்ந்து போய் விடுவார்கள். ஆக, இந்த வகை வியாபாரிகளுக்கு துன்பமும், அடக்கு முறையும் நீடிக்க வேண்டும். இந்த ஓநாய்கள் கண்ணீர் விட ஆடுகள் நனைய வேண்டும், என்றோ நின்று விட்ட மழையை திட்டவும் வேண்டும்.

சரி, இவர்களின் பகுத்தறிவு எல்லா மதத்திற்க்கும் எதிரானதா அல்லது இந்து மதத்திற்கு மாத்திரம் எதிரானதா? இவர்களுக்கும் வத்திக்கானுக்கும், எண்ணை விற்கும் பணத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் உள்ளது போல் தெரிகிறதே.

திராவிடத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந்தால், தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் தொடர்பு இல்லையா? தமிழ் வாழ்ந்தது நேற்று முளைத்த இந்தப் “பகுத்தறிவு”ப் பதர்களால் அல்ல, அது காலங் காலமாய் சைவ, வைணவ மூதறிஞ்ஞர்களால் வளர்க்கப்படுகிறது. அவர்களை விட இந்த அற்பர்கள் எதை சாதித்தார்கள்?

தொடரும் ...

Tuesday, June 2, 2009

ஒற்றுமை

தீவிர போக்குடையவர்கள் (Fundamental Extremists) பெரும்பாலும் ஒரு ஒற்றுமையை விடாப்பிடியாக வெளிப்படுத்துகிறார்கள். ’நான் நம்புவதை நீயும் நம்பு, அல்லது அழிந்து போ’ என்பது தான் அது. மேற்கத்தைய மதங்கள், கம்யூனிஸவாதிகள், ஈழப்புலி ஆதரவாளர்கள், சில அரசியற் கட்சிகள், பிரிவினைவாதிகள், சிங்கள-பெளத்த பேரினவாதிகள், இந்தியாவிலுள்ள நாஸ்திகர்கள், நாஜிக் கொள்கையுடைய வெள்ளைத் தோல் சாதி வெறியர்கள் என இவர்கள் பட்டியல் நீள்கிறது. நிச்சயமாக இங்கு அவர்கள் தூக்கி வைத்திருக்கும் கொள்கைகள் காரணமில்லை.

இதன் பின்னணி மனோதத்துவத்தில் ஆராயப்படுகிறது. மனதின் தன் முனைப்பு (ego)தனது ’இருத்தலை’ பல விதங்களிலும் வெளிப்படுத்த தலைப் படுகிறது. அது மனப்பாசாங்கு (Hypocrisy) வரை சென்று வன்முறையில் அடம்பிடிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தனித்துவமாக அடையாளப் படுத்தவே முயல்கிறான். ஆரோக்கியமான ஆரம்ப நிலைகளில் தனக்குரிய படிப்பை, பணத்தைச் சம்பாதிப்பதிலிருந்து சமூகத்தில் மதிக்கப்படும் நிலை அடையும் வரை இது செல்லும் அதே வேளை, ஒரு குழு அடையாளத்திற்கு (மதம், மொழி போன்றவை) கீழே ஒன்று சேர்ந்து ‘தன்னை’ நிரூபிக்கும் வேகம் வியாபிக்கிறது. இப்படியான மனப்போக்குள்ளவர்கள் சில தீவிர மதங்களையும், தீவிரவாத குழுக்களையும், கொள்கைகளையும் உருவாக்கி விட்டது தான் தூரதிஷ்டமாகும். இவர்களும் இவர்கள் வழியில் தம்மை அடையாளப்படுத்த முனைபவர்களும் சமூகத்திலும், பின்னர் உலகத்திலும் பன்முகத்தன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாயிருக்கின்றனர். இவர்களின் ’தூய’ உலகத்தில் ஒற்றுமை எனப்படுவது தம்மைத் (அவர்கள் கொள்கை) தவிர வேறு எவரும், எதுவும் இருக்கக்கூடாது.

இங்கு இந்திய மதங்களை விட்டது போன்ற குறை வரலாம். இந்திய சித்தந்தங்களை அடிப்படையாகக் கொண்டு நீடித்த காலத்துக்கு, பரந்துபட்டளவில் வன்முறை இயற்றப்பட்டதில்லை. ஏனெனில், இந்திய மதங்கள் பன்முகத்தன்மைக்கு என்றுமே அச்சுறுத்தலாய் இருப்பதிலலை. இருந்த போதிலும், சில நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரிவுகளின் பின்பற்றுனர்கள் சனாதன தர்மத்தின் அடிப்படைக்கு முரணாக உள்ளதையும் பிரஸ்தாபிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, சத்திய சாய் பாபா அடியார்கள், தீவிர வைஷ்ணவ குழுக்கள் போன்றன.

தற்கொலை செய்பவர்கள், அது என்ன காரணமாக இருப்பினும், ஒரே புள்ளிவிபரத்துக்குள் அடைக்கப் படுவது போல ஒரே மனப்போக்குள்ள இவர்கள் ஏதாவது ஒரு பதாகை பொறித்த கொட்டகையினுள் ஒன்று சேர்வதன் மூலம் தம்மைத் தனிமைப் படுத்தி விடுகின்றனர். ஊனுண்ணும் விலங்குகள் தம்மை எதிர்க்காத தாவரவுண்ணிகளை இரை கொண்டாலும் இரையின் இருப்பை அழிக்க முயலா. ஆனால், ஊனுண்ணிகள் தம்மையொத்தவற்றை உயிர்வாழ விடா. தம்மை, தம் கொள்கைகளை வன்முறையில் நிலைனிறுத்த முயலும் மனநோயாளிகள் தமக்குள் மோதி தம்மை அழிக்கும் சாத்தியமே எப்போதும் உள்ளது.

Monday, June 1, 2009

கேட்பவர்கள்

காதுள்ளவர்கள் கேட்கக் கடவர் - இயேசு.
கேட்பவர்கள் ஞானிகள் என இந்தியச் சித்தந்தமும் பகர்கின்றது. இங்கு கேட்டல் வெறும் காதைக் குறிப்பதல்ல. ZEN புத்த தத்துவங்கள் சொல்வது போல “கேட்க தயாராக எம்மை வெற்றுப்படுத்தி வைத்தல்” உள்ளே உயிர் வளர உதவும். இன்றைய உலகில் கருத்துக்கு எதிர் கருத்து எடுத்து ரவுத்திரம் கொண்டு மோதுமளவு ‘வலிமை’ உடைய எவரும் தம்மை வெற்றுப் படுத்தி தகவலை உள்வங்கி அதற்கு பின் நிதானமாக ‘போரிட’ தயார் இல்லை. எனவே, கேட்கும் வலிமை பெற்று எம்மை நிலைப் படுத்த உறுதி கொள்வோம்.
 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .